சென்னையில் 13 வயது பெண்ணை 10 இடங்களில் வெட்டிக்கொன்ற கொடூரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான வேதவள்ளி, தனது மகன் பாபு உடன் வசித்து வருகிறார். அத்துடன், தனது தம்பி மகள் சோபனா என்கிற 13 வயது சிறுமியைத் தனது வீட்டிலேயே அவர் வளர்த்து வந்தார். சோபனாவின் பெற்றோர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அதுமுதல் வேதவள்ளி தான் சிறுமியை வளர்த்து வந்தார். 

girl murdered

இந்நிலையில், நேற்று வேதவள்ளி வேலைக்குச் சென்ற பிறகு, சோபனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வெளியே சென்றிருந்த பாபு, வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு, தனியாக இருந்த சோபனாவை, 10 இடங்களில் கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு, பாபு தப்பி ஓடியுள்ளார். சோபனாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சோபனாவை அனுமதித்தனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி, ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும், சோபனா வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து, தலைமறைவாக உள்ள பாபுவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

girl murdered

இதனிடையே, சென்னையில் 13 வயது சிறுமி 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.