ஆடைகள் களையப்பட்டு கிடந்த பெண்!
By Arul Valan Arasu | Galatta | 11:44 AM
ஆடைகள் களையப்பட்ட நிலையில் கருவேலங்காட்டில் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த இடையார் கிராமம் அருகே, அப்பகுதியில் உள்ள ஜமீனுக்கு சொந்தமான கருவேலங்காடு ஒன்று உள்ளது. இடையார் கிராம மக்கள், இந்த கருவேலங்காடு வழியாகத்தான் மெயின் ரோட்டிற்கு, வந்து செல்ல முடியும்.
இந்நிலையில், இன்று காலை இடையார் கிராமத்திலிருந்து, கருவேலங்காடு வழியாக சிலர் நடந்து சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் ஆடைகள் களையப்பட்ட நிலையில், பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.
அப்போது, கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு சுமார் 45 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது. மேலும், பெண்ணின் ஆடைகள் களையப்பட்டு நிலையில் மீட்கப்பட்டதால், இந்த பெண் கொலை செய்யப்படும் முன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்குத் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.