மக்கள் அன்றாடம் பார்த்து மகிழும் தமிழ் சேனல்களில் ஒன்று ஜீ தமிழ்.குறுகிய காலத்தில் மக்கள் மனதில் தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள் என்று மக்கள் மனதில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து விட்டது ஜீ தமிழ்.இந்த சேனலின் முக்கிய தொடர்களில் ஒன்று யாரடி நீ மோகினி.

ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களின் நெஞ்சங்களில் பல வருடங்களாக அசைக்கமுடியாத இடத்தை பிடித்துள்ள ஒரு தொடர் யாரடி நீ மோகினி.முதலில் சஞ்சீவ் இந்த தொடரில் நாயகனாக நடித்து வந்தார்.பின்னர் சில காரணங்களால் இவர் இந்த தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக ஸ்ரீகுமார் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

நக்ஷத்திரா இந்த தொடரின் நாயகியாகவும்,யமுனா சின்னதுரை இந்த தொடரில் மோகினியாகவும் அசத்தி வருகின்றனர்.சைத்ரா ரெட்டி இந்த தொடரில் வில்லியாக நடித்து பேராதரவை பெற்று வருகிறார்.பாத்திமா பாபு இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவர்களை தவிர இன்னும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடர் விறுவிறுப்பாக 1200 எபிசோடுகளை கடந்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடர் விரைவில் நிறைவடைகிறது என்ற தகவல் சில நாட்களுக்கு முன் கிடைத்தது.தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்று கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை தொடரின் வில்லியாக நடித்து அசத்திய சைத்ரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Chaitra Latha (@chaitrareddy_official)