தமிழகத்தின் முன்னணி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ் நிறுவனம்.தமிழில் தங்கள் ஒளிபரப்பை சில வருடங்களுக்கு முன்னரே ஜீ நிறுவனம் தொடங்கினர்.இருந்தாலும் தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகளால் மக்கள் மனதில் இடம்பிடித்தனர்.



நிகழ்ச்சிகளை தாண்டி மக்களை ஜீ தமிழ் பக்கம் இழுத்தது அவர்களின் தொடர்கள் தான் செம்பருத்தி,பூவே பூச்சூடவா,யாரடி நீ மோஹினி என்று இந்த தொடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அரசு அனுமதியளித்ததை அடுத்து சமீபத்தில் தொடர்களின் ஷூட்டிங்கை ஆரம்பித்தனர்.



தற்போது சீரியல்களின் புதிய எபிசோடுகள் வரும் ஜூன் 22ஆம் தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் ஜீ தமிழ்.சீரியல் நடிகர்,நடிகைகள் இந்த அறிவிப்பை வெளியிடும் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்