தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக்,புதுயுகம் சேனல்களில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.



டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.



இதனை தொடர்ந்து தற்போது தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் ரத்தாகி அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பது குறித்து அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



உலகமே தற்போது கேமரா இல்லாமால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளது.கூடியவிரைவில் நிறைய பேருக்கு பைத்தியம் பிடிப்பது உறுதி என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.இந்த பதிவை கீழே காணலாம்