தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2004ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .தொடர்ந்து சண்டக்கோழி ,திமிரு துப்பறிவாளன் ,இரும்புத்திரை என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

அடுத்ததாக "எது தேவையோ அது தர்மம்" என்ற குறும்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. சில தினங்களுக்கு முன் இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்தது.

விஷால் 31 என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் யுவன்சங்கர்ராஜா.பிரபல தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பிதாமகன் ,ரஜினிமுருகன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பல வெற்றித் திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.

சக்ரா திரைப்படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கும் #விஷால் 31 திரைப்படம் விஷால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு என்று பூஜை போடப்பட்டு உள்ளது.பட பூஜையில் நடிகர் விஷால் நடிகை டிம்பிள் ஐஆர்டி நடன இயக்குனர் தினேஷ் ,இயக்குனர் து.பா.சரவணன் , ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விஷால் 31 திரைப்படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Shooting of @VishalKOfficial ‘s #vishal31 starts from auspicious today with Pooja.directed by @THUPASARAVANA.All the best to the whole team fr comfortable & safe shooting+Tremendous Success. #NotACommonMan @VffVishal @thisisysr @balasubramaniem @johnsoncinepro @HariKr_official pic.twitter.com/3h5xTe7JIZ

— Johnson PRO (@johnsoncinepro) May 6, 2021