தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று ஸ்டார் விஜய்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும்,நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு.இந்த தொலைக்காட்சியின் மூலம் பலருக்கு சினிமா வாய்ப்புகள் வந்துள்ளது.

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நடைபெறாததால் பழைய தொடர்கள்,நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தனர்.தற்போது ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதியளித்ததை அடுத்து விஜய் டிவி தொடர்களின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளது , விஜய் டிவி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளது. இனி நேயர்களின் அபிமான தொடர்களை நேயர் தொடர்ந்து கண்டுகளிக்கலாம்.தற்போதைய கோவிட் -19 தொற்றுநோயால் காரணமாக விஜய் டிவி தனது தொடர்கள் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளை நிறுத்திவைத்திருந்தது. தற்போது படப்பிடிப்பிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.இதனிடையில் நேயர்களின் அபிமான நிகழ்ச்சிகளாக மகாபாரதம், சூப்பர் சிங்கர், லொல்லு சபா போன்ற நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பாகிவந்தது. மற்றும் முழு அடைப்பின்போது பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களுடன் ஒளிபரப்பாகிவந்தது.

விஜய் டிவி ஜூன் 08 திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு ‘செந்தூரா பூவே’ என்ற புதிய மெகா சீரியலைத் தொடங்கவுள்ளது.செந்தூரா பூவே ஒரு காதல் நிறைந்த குடும்ப நாடகம். நடிகர் ரஞ்சித் (பாண்டவர் பூமி, பீஷ்மர், நேசம் புத்துசு போன்ற பிரபலமான படங்களில் நடித்தார்).இதன் கதை, நடுத்தர வயது (45) மனைவியை இழந்த துரைசிங்கத்தைச் பற்றியது. இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். அவருக்கு கயல் மற்றும் கனி என்ற இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு துரைசிங்கம் மறு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. சூழ்நிலைகள் காரணமாக அவரை மறுமணம் செய்து கொள்ள அவரது தாய் வலியுறுத்துகிறார். அதன் காரணமாக துரைசிங்கம் ரோஜாவை திருமணம் செய்ய நேர்கிறது. ரோஜா துரைசிங்கத்தின் மகள்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர் ஆவர். ரோஜா - துரைசிங்கம் திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்யாசம் உள்ளது. அதையும் மீறி அவர்கள் இருவரும் எவ்வாறு வாழ்வில் இணைகிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது செந்தூரப்பூவேய் நெடுந்தொடர்.

துரைசிங்கமாக நடிகர் ரஞ்சித் முதல் முதலில் இந்த தொடரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாண்டவர் பூமி, நேசம் புதுசு , பீஷ்மர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.வரும் வாரம் முதல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, காற்றின் மொழி, ஆயுத எழுத்து, நாம் இருவர் நமக்கு இருவர், தேன்மொழி ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும். நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர்.