சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து புதிதாக உருவெடுத்துள்ள ஹீரோ Panja vaishnav tej.இவர் நடிக்கும் முதல் படத்தை Buchi Babu Sana இயக்குகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு உப்பெண்ணா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.



இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் தமிழ் உரிமையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.இந்த படத்தில் தளபதி விஜயின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.



இது குறித்து நமது நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்த போது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்பது தெரியவந்தது.ஜேசன் சஞ்சய் திரைப்படங்களில் நடிப்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்று விஜய் தரப்பு தெளிவுபடுத்தியது.