கடந்த மாதம் நடந்த விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா பேசிய பேச்சு பல தரப்பினரிடையேயும் விவாதத்திற்கு உள்ளானது.இவரது பேச்சு மிகவும் தவறானது என்று சிலர் போர்க்கொடி தூக்கினர்.இவரது பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.



ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பினர்.பலரும் ஜோதிகா பேசியதில் தவறேதும் இல்லை தவறாக புரிந்துகொள்ளப்பட்ட கருத்து என்று விளக்கமளித்தனர்.இந்நிலையில் தற்போது நடிகரும்,ஜோதிகாவின் கணவருமான சூர்யா இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.



ஜோதிகா பேசிய கருத்தை தான் ஆதரிப்பதாகவும் ,வெறுப்பை அகற்றி அன்பை விதைப்போம் என்று சூர்யா தெரிவித்திருந்தார்.சூர்யா வெளியிட்ட இந்த அறிக்கைக்கு மக்கள் விஜய் சேதுபதி வரவேற்பு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பு என்று பதிவிட்டுள்ளார்.

Sirappu 👍 pic.twitter.com/f63971LDCt

— VijaySethupathi (@VijaySethuOffl) April 28, 2020