கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது.இதனை இந்தியாவில் பரவாமல் தடுக்க தங்களால் முடிந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இந்த சமயத்தில் வேலை இல்லாமால் இருக்கும் இருக்கும் பலருக்கும் உதவும்படி பல பிரபலங்களும் தங்களால் முடிந்ததை கொடுத்து வருகின்றனர்.நேற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவியாக வழங்கினார்.



இது தவிர தனது ரசிகர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக ரூ.5000 அனுப்பியுள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.இந்த தொகையை வைத்து மதுரையிலுள்ள விஜய் ரசிகர் தனது நண்பரான மாற்றுத்திறனாளி அஜித் ரசிகருக்கு உதவி செய்துள்ளார்.

தளபதி ரசிகர்களுக்கு மத்தவங்களை வாழ வெச்சு தான் பழக்கம் ! 😍❤ தளபதியால் அஜித் ரசிகருக்கு கிடைச்ச உதவி ! ❤ #Master #Thalaivaa @actorvijay 😘pic.twitter.com/BLVAh4GhJv#AjithFansBotsExposed

— Pokkiri Aaru (@itz_pokkiri_6) April 26, 2020