மலையாள திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ. தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.

டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகியிருக்கும் மின்னல் முரளி படம் விரைவில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் டொவினோ தாமஸுக்கு டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக இருக்கிறது. பல ஊர்களில் மக்கள் மீண்டும் லாக்டவுன் நிலையில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கிறது பதட்டத்தை தருகிறது.

Hello. As it turns out, I've been tested positive for Covid and is currently in isolation. It was an asymptomatic case, I'm fine and well. So it's been quarantine time for a couple of days now.A few more days to look forward & long about returning to action & entertaining you all pic.twitter.com/0rFKNg15AF

— Tovino Thomas (@ttovino) April 15, 2021