சென்னையின் பிரபல திரையரங்கங்களில் ஒன்று தேவி திரையரங்கம்.ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரையரங்களில் இதுவும் ஒன்று.சமீபத்தில் இந்த திரையரங்கம் 50 ஆண்டுகள் கடந்து கோல்டன் ஜூப்லி கொண்டாடியது.



இந்த கொரோனாவில் இருந்து மீண்டு திரையரங்குகள் எப்போது சகஜ நிலைக்கு வரும் உள்ளிட்ட சில முக்கிய கேள்விகளுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சமீபத்தில் பிரபல நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளித்தனர்.



தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு அனுபவம்,உங்களுடன் சேர்ந்து பலரும் ஒரு படத்தை கொண்டாடுவார்கள் அது வேறு எதிலும் கிடைக்காது.தளபதி விஜய் எப்போதும் இங்குதான் ரசிகர்களுடன் இணைந்து படம்பார்ப்பார்,அவர் ரசிகர்களுடன் படம் பார்த்துவிட்டு அவர்களுடனே சென்றுவிடுவதால் மீடியாவிற்கு இந்த செய்தி தெரியாது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.



தியேட்டர்கள் அழிந்து விடும் பலரும் பல காலமாக தெரிவித்து தான் வருகின்றனர்.ஒரு நல்ல விஜய் படம் வந்தால் தியேட்டருக்கு கூட்டம் தானாக வந்து விடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு நிச்சயம் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.