கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது.இதனை இந்தியாவில் பரவாமல் தடுக்க தங்களால் முடிந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இந்த சமயத்தில் வேலை இல்லாமால் இருக்கும் இருக்கும் பலருக்கும் உதவும்படி பல பிரபலங்களும் தங்களால் முடிந்ததை கொடுத்து வருகின்றனர்.நேற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவியாக வழங்கினார்.



இது தவிர பல ரசிகர் மன்றங்களுக்கும் நிதியுதவி அளித்துள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.தற்போது விஜய் கஷ்டப்படும் தனது ரசிகர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக ரூ.5000 அனுப்பியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.விஜயின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.