உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.



கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.



தற்போது தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம், நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நஉதவித்தொகையாக அளித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

#Tamannaah Donates Rs. 3Lakhs To #CoronaCrisisCharity 👍🏻👏🏻👌🏻#coronavirusindia #corona #COVID19outbreak #COVID19 #lockdown #lockdownindia #StayAtHomeSaveLives @tamannaahspeaks https://t.co/afXyZzN3rf pic.twitter.com/bNioUkYfLv

— RIAZ K AHMED (@RIAZtheboss) April 19, 2020