தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக மூன்று மாதங்கள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.கொரோனா பாதிப்பு காரணமாக சில தொடர்களில் நட்சத்திரங்கள் மாற்றப்பட்டனர்.

சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.

சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய தொடர் சுந்தரி.இந்த தொடரின் நாயகியாக கேப்ரியல்லா நடித்துள்ளார்,இவர் டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறியவர்.இந்த தொடரின் நாயகனாக ஜிஷ்ணு மேனன் நடித்துள்ளார்,ஸ்ரீகோபிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜிஷ்ணு மற்றும் ஸ்ரீகோபிகா இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவம் செய்து வந்தனர்.இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு தற்போது நெகட்டிவ் ஆகி விட்டது என்றும் ஷூட்டிங்கில் இணைத்துள்ளோம் என்றும் தற்போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Jishnu Menon (@jishnumen_official)

View this post on Instagram

A post shared by Rudra (@shreegopika__neelanath)