தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.இதன் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது பலரும் ஆர்வத்தோடு இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.ஓவியா,ஆரவ்,கஞ்சா கருப்பு,பரணி,பொன்னம்பலம்,வையாபுரி,காயத்ரி ரகுராம்,ஹரிஷ் கல்யாண்,பிந்து மாதவி,ரைசா,சினேகன் என்று பலரும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் இந்த தொடரை மிகவும் பிரபலமாக்கினர்.ஆரவின் மருத்துவ முத்தம்,ஓவியாவின் தைரியமான பேச்சு மற்றும் தற்கொலை முயற்சி,எல்லாத்துக்கும் பரணி தான் காரணாம் என்ற கஞ்சா கருப்பின் டயலாக்,பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்த பரணி,சினேஹானின் கட்டிப்புடி வைத்தியம்,ஓவியா ஆர்மி என்று பல சுவாரசிய நிகழ்வுகளோடு தொடங்கியது இந்த நிகழ்ச்சி.இவற்றோடு கமலின் வார்த்தை விளையாட்டுகளும் சேர்ந்துகொள்ள மக்கள் மனதில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு சிறந்த நிகழ்ச்சியாக அமர்ந்தது பிக்பாஸ்.

முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,அடுத்த வருடம் சீசன் 2 தொடங்கியது ,சீசன் 1-லிலேயே இவ்வளவு பரபரப்பு இருக்க சீசன் 2 மட்டும் குறைச்சலாக இருக்குமா என்ன என்று ரசிகர் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தனர்.யாஷிகா ஆனந்த்,மஹத்,ஜனனி ஐயர்,ரித்விகா,தாடி பாலாஜி,சென்றாயன்,மும்தாஜ்,ஐஸ்வர்யா தத்தா என்று களைகட்டியது பிக்பாஸ் 2.மஹத்-யாஷிகாவின் காதல்,பாலாஜியின் குடும்ப விவகாரம் என்று மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இரண்டாவது சீசன்.

அதுதான் எல்லாமே பண்ணிட்டீங்களே என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் ,அடுத்த சீசன் தொடங்கியது.இந்த சீசன் தொடக்கத்தில் ஷெரின்,சாண்டி,கவின்,லாஸ்லியா,தர்ஷன்,சேரன்,சரவணன்,மதுமிதா,வனிதா என்று கலகலப்பாகவே தொடங்கியது ஆனால் போக போக கவின்-லாஸ்லியா காதல் விவகாரம்,சேரன்-சரவணன் வாக்குவாதம்,மதுமிதாவின் தற்கொலை முயற்சி,வனிதாவின் கொளுத்திப்போடும் குணம் என்று தொடர் பரபரப்பாக சென்று அதிக TRP-யை அள்ளியது.

கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.பிக்பாஸ் 4 தமிழ் ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஹிந்தியில் பிரபல ஷோவாக இருந்த பிக்பாஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கொரோனா பாதிப்பிற்கு பிறகு பிக்பாஸ் தெலுங்கு சீசன் 4 கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி முதல் தொடங்கியது.சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் சுஜிதா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார் அதில் தற்போது தொடங்கியுள்ள பிக்பாஸ் தெலுங்கு சீசன் 4-ல் தனது அண்ணன் பங்கேற்பதாகவும்,அவருக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.ரசிகர்களும் தங்கள் சார்பில் சுஜிதாவின் அண்ணனிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

All the very best my brother for BIGBOSS4. Master suresh to bigboss surya kiran #biggboss #biggboss4 #biggboss #starmaa

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush) on