கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.



கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து தற்போது சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.



நமக்காக இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வரும் நல்லுள்ளங்களுக்கு நன்றி.அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் உதவியே நமது வீட்டை விட்டு வெளியேறாமல் நம்மை பாதுகாத்துக்கொள்வதுதான்.மிகவும் முக்கியமான வேலையாக இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள் இல்லையென்றால் முடிந்தளவு வீட்டிலேயே இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Let’s stay indoors and fight Tis 🙏 💪#StayAtHomeSaveLives @Vijayabaskarofl @MoHFW_INDIA pic.twitter.com/IgxgngeL6X

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 24, 2020