வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து பத்துதல படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து மாநாடு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் STR.இதனை தொடர்ந்து பத்து தல,கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவரது மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வந்தார் சிம்பு.இந்த படத்தின் இறுதிக்கட்ட சில நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

இந்த படத்தின் டப்பிங் வேலைகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.தற்போது இந்த படத்தினை நடிகர் சிம்புவுடன் இணைந்து பார்த்ததாகவும் படம் மிக அருமையாக வந்துள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.வெங்கட் பிரபு பட்டையை கிளப்பியுள்ளார் என்றும் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன்,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் அருமையாக நடித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Our Dear @SilambarasanTR_ and myself together watched our Film #Maanaadu. We both are Extremely happy for dir @vp_offl 's effective adorable wrk. #Mangaththa Maker is back on action with thrilling mass entertainer. Thnx to our beloved director. @iam_SJSuryah sir class performance

— sureshkamatchi (@sureshkamatchi) May 8, 2021