ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பெரிய பெற்றவர் ஷபானா.

இவரது நடிப்பை பலரும் இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.சின்னத்திரையின் கனவுக்கன்னியாக வெகு விரைவில் உருவெடுத்தார் ஷபானா.இவருக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இவர் பிரபல சீரியல் நடிகர் ஆர்யனுடன் காதல் வயப்பட்டுள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.ஆர்யன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

சமீபத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் ஆர்யன்.இதில் ரசிகை ஒருவர் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்க ஆர்யன் ஷாபனாவை டேக் செய்து இவருக்கு என்ன பதில் சொல்ல என்று கேட்டுள்ளார்,அதற்கு ஷாபனாவும் Mine என்று பதிலளித்துள்ளார்,அத்தோடு மேலும் ஒரு கேள்விக்கு செம்பருத்தியில் இருப்பவர் கொடுத்தது என்றும் ஆர்யன் தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் காதலிப்பது உறுதியாகிவிட்டது விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.