நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சசிகுமார் எம்ஜிஆர் மகன்,ராஜவம்சம்,கொம்புவெச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தவிர நெல் ஜெயராமனின் வாழ்க்கை வலராற்று படம்,நாநா என்று பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

.



கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தும் பலர் வெளியில் சுற்றி வருகின்றனர்.இதற்காக காவல்துறையுடன் சேர்ந்து சசிகுமார் ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.



மதுரையில் வாலன்டியராக ஒரு நாள் பணியாற்றிய சசிகுமார்.அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.மேலும் அவசர நேரங்களில் மக்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

.