டகால்டி படத்தின் ரிலீஸை தொடர்ந்து சந்தானம் டிக்கிலோனா,பிஸ்கோத் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்இதனை தொடர்ந்து A1 இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.



லார்க் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.காவிய தலைவன்,செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களில் நடித்த அனைகா சோதி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.



இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியது என்று படக்குழுவினர் ஒரு புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Happy to announce that I've begun shooting for my next wholesome entertainer with #A1DirectorJohnsonK #SanthanamNextBegins#LarkStudios #KKumar #AnaikaSoti @Music_Santhosh @proyuvraaj 👍😊 pic.twitter.com/CDK8Rh9LOo

— Santhanam (@iamsanthanam) March 16, 2020