திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். பிரேம்குமார் இயக்கத்தில் 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார் சமந்தா.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள சமந்தா உடற்பயிற்சி, யோகா, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். லாக்டவுனில் ரசிகர்களின் பதிவை கவனிப்பது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்வதெப்படி என்ற டிப்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழங்கினார் சமந்தா.
அதனைத்தொடர்ந்து மாமனார் நாகர்ஜுனாவுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நாட்டார். சமந்தா செய்த இந்த காரியம் பிற திரைப்பிரபலங்களையும் ஈர்த்தது. சமந்தாவின் ரசிகர்களும் இதை பின்பற்றினர். இந்நிலையில் வீட்டின் மொட்டைமாடியில் கார்டனிங் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா. இந்த வீடியோ இணையத்தை அதிர வைத்து வருகிறது. நடிகைகள் லக்ஷ்மி மன்சு மற்றும் ரகுல் ப்ரீத் சிங்கை சேலஞ் செய்துள்ளார் சமந்தா. உண்ணும் உணவை வீட்டிலேயே விவசாயம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சமந்தா. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடிக்கவுள்ளனர். லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.