கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.



சமீபத்தில் வெளியான மகேஷ் பாபுவின் sarileru neekevaru என்ற படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்நேற்று ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசிய ராஷ்மிகா சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.



எப்போது தமிழில் நடிக்கப்போகிறீர்கள் என்று ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா, கார்த்தி ஹீரோவாக படத்தில் நடித்துள்ளேன் இந்த கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்த வருடத்தில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.