90ஸ் கிட்ஸ்களின் உள்ளம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவர் நடிகை ரம்பா. அருணாச்சலம், காதலா காதலா, நினைத்தேன் வந்தாய், மின்சாரக்கண்ணா, உள்ளத்தை அள்ளித்தா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த அழகான ஜோடிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது நடிகை ரம்பா 10-வது திருமண நாளை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் நான், எனது கணவர், என் குழந்தைகள் ஆகியோர் மட்டும் கொண்டாடினோம்.
இந்த நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. நாங்களே இணைந்து இந்த கேக் செய்தோம். கடையில் வாங்குவதை விட சிறப்பாக இருந்தது. கேக்கின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் 10 வருட காதல் கதையைக் கொண்டுள்ளது. எங்கள் மகள்கள் லான்யா, ஷாஷா எங்களுக்கு சர்பரைஸாக ஸ்பெஷல் கார்டு அளித்தனர். இந்த கடினமான நேரங்களில் நாங்கள் பணம், ஸ்பெஷலான பரிசுகள் எதுவும் இல்லாமல் அன்போடு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.