தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருந்த NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.



இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.



சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.அதில் ரகுல் மது வாங்கி செல்வதாக பலரும் பதிவிட்டிருந்தனர்.இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரகுல் மருந்தகத்தில் மது விற்பனை செய்வது எனக்கு தெரியாதே நான் மருந்து தான் வாங்கி சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Oh wow ! I wasn’t aware that medical stores were selling alcohol 🤔😂😂 https://t.co/3PLYDvtKr0

— Rakul Singh (@Rakulpreet) May 7, 2020