உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.



கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன என்ற அறிவிப்பை FEFSI வெளியிட்டிருந்தனர்.இந்த இக்கட்டான நிலையில் FEFSI தொழிலாளர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி திருத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.



இந்த கோரிக்கையை ஏற்று தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் FEFSI தொழிலாளர்களுக்காக ரூ 50 லட்சம் உதவித்தொகையாக வழங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் 10 லட்சம்,சிவகார்த்திகேயன் 10 லட்சம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking : Actor @rajinikanth gave ₹50 lakhs for #FEFSI Workers who are facing shutdown due to Corona Virus our break. #corona #Coronaindia #fefsi

— Johnson PRO (@johnsoncinepro) March 24, 2020