பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமா அளவுக்கு இந்திய படங்களும் இருக்கும் என்று சவால் விட்டவர் ராஜமௌலி.பாகுபலி படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.



RRR படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.



இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து ராஜமௌலியின் பதிவு ஒன்றை படக்குழுவினர் பகிர்ந்துள்ளார்.இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே போட்டி போட்டு நடிகை ஒருவர் தேவைப்பட்டார் என்றும் இது முக்கோண காதல் கதை இல்லை என்பதையும் தெரிவித்தார்.மேலும் சீதா என்னும் இந்த கதாபாத்திரம் மிகவும் அப்பாவியானதாகவும்,ஆபத்தானதாகவும் இருக்கும் அதற்கு பொருத்தமானவர் ஆலியா பட் என்று தெரிவித்துள்ளார்.

Sita is the coming together of many emotions and it's for that reason @aliaabhatt was an obvious choice! #RRR #RRRInsights #RRRMovie pic.twitter.com/3OMvY8XeOd

— Nikil Murukan (@onlynikil) May 5, 2020