கொரோனா காரணமாக அனைத்து ஷூட்டிங்குகளும் சினிமா,சீரியல்,டிவி நிகழ்ச்சிகள் என்று எதுவும் நடைபெறாமல் உள்ளது.இதனால் பல சேனல்களில் தங்களது ஹிட் சீரியல்,நிகழ்ச்சிகள்,படங்கள் போன்றவற்றை ஒளிபரப்பி வருகின்றனர்.



ஏப்ரல் 20 முதல் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளதால் சின்னத்திரை ஷூட்டிங்குகள் தொடங்கும் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து ராதிகா விளக்கத்தை ஒரு வாய்ஸ்நோட் மூலமாக தெரிவித்துள்ளார்.



எந்த சேனலிலும் ஷூட்டிங் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கவில்லை ,இதற்கு அடுத்து தொடங்கும் ஷூட்டிங்கிற்கு ஸ்கிரிப்ட் உடன் தயாராக இருக்குமாறு தெரிவித்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.