செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.



இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.



தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பதிவிட்டுள்ளார்.ஆறு வருடங்களுக்கு முன் தன்னை சனி,ஞாயிறுகளிலும் வேலைக்கு வர சொல்பவர்களை கருடபுராணத்தின் படி தண்டிக்கவேண்டும் என்று பதிவிட்டிருந்ததை மறுபதிவிட்டு கருடபுராணம் வேலை செய்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார்.