தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் பிரபாஸ்.இவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று தந்து.கடைசியாக இவர் நடித்த சாஹோ திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது பிரபாஸ் 20 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மகாநதி படத்தின் இயக்குனருடன் தனது 21ஆவது படத்தில் பணியாற்றவுள்ளார்.

தற்போது பிரபாஸ் பேஸ்புக்கில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று , பேஸ்புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இவரை தொடர்ந்து அல்லு அர்ஜுன் 13 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார்.இவர்களை தொடர்ந்து மகேஷ்பாபு 7.9 மில்லியன்,ராம்சரண் 7.1 மில்லியன்,விஜய் 6.3 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளனர்.