உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.



கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக சினிமா,சீரியல் உள்ளிட்ட அணைத்து ஷூட்டிங்க்குகளும் மார்ச் கடைசியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.



திரைப்படங்களுக்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளை இன்று முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள FEFSI மாஸ்டர்,சூரரை போற்று,இந்தியன் 2,டாக்டர் உள்ளிட்ட படங்களுக்கும்,சில சீரியல் மற்றும் வெப் சீரிஸ்களுக்குமான பணிகள் தொடங்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.