விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொலைக்காட்சித் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலசரவணன் இயக்குனர் சசிகுமார் கதாநாயகனாக நடித்த குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ஈகோ என தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

குறிப்பாக திருடன் போலீஸ், டார்லிங், ஒரு நாள் கூத்து, கவலை வேண்டாம் ,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்றத் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த வருட பொங்கல் விருந்தாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார் நடிகர் பாலசரவணன்.

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பாலசரவணனின் தங்கையின் கணவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது பாலசரவணனின் தந்தையும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலசரவணனின் தந்தை S.A.ரங்கநாதன் அவர்கள், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் பாலசரவணனின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக நடிகர் பாலசரவணன் தங்கையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்த சில நாட்களிலேயே பாலசரவணன் என் தந்தையும் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை படுத்தியுள்ளது. கட்டாயம் முக கவசம் அணிவோம் சமூக இடைவெளியை பின்பற்றுவோம் தடுப்பூசி எடுத்துக்கொண்டு நம்மையும் நாட்டையும் காப்போம்.

நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரங்கநாதன், கொரோனா தொற்று காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். #actorbalasaravanan ‘s father #SARanganathan passed away today in madurai, due to #Covid19. #RIPSARanganathan pic.twitter.com/IKsygDWJB3

— NadigarSangam PrNews (@NadigarsangamP) June 11, 2021