கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது.இதனை இந்தியாவில் பரவாமல் தடுக்க தங்களால் முடிந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் வேலை இல்லாமால் இருக்கும் இருக்கும் பலருக்கும் உதவும்படி பல பிரபலங்களும் தங்களால் முடிந்ததை கொடுத்து வருகின்றனர்.நேற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவியாக வழங்கினார்.

இதில் புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் அளித்திருந்தார் விஜய்.இதுகுறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ,புதுச்சேரி மக்களுக்கு உதவ முன்வந்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.இதே போல பிற நடிகர்களும் புதுச்சேரி அரசுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Actor Vijay donated ₹5lakhs as #COVID19 Chief Minister Relief Fund. Thanking him for his contribution.@actorvijay pic.twitter.com/5UrkA54B8Q

— V.Narayanasamy (@VNarayanasami) April 22, 2020