மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.



இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.



இந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் அவ்வப்போது போட்டோக்களையும்,விடீயோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் இருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.இது அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gonna take a small break from social media for a while..hoping to resume soon.. stay home!! stay safe tweeple pic.twitter.com/wqTvxtIsj4

— neelima esai (@neelimaesai) April 17, 2020