கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் மோகன் ராமன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் நடிப்பது குறித்து ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மோகன் ராமன், என்னுடைய ஒப்பந்தம் படி நடிக்கும் பாத்திரம் பற்றி கூறமாட்டேன் என்று கூறியுள்ளார்.

As per my contract I cannot talk about the role etc..... So you can keep guessing and you will not get either a yes or a no from me. Ha ha ha. Thank you.

— Mohan Raman (@actormohanraman) May 1, 2020