தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முறையான பாதுகாப்புடன் தொடங்கி பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மே 31 அன்று சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது இதனை படக்குழு வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தினர்.

அடுத்ததாக மகேஷ்பாபு பிறந்தநாள் ஆகஸ்ட் மாதம் வருவதால் மீண்டும் படம் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்ற தகவல்கள் சுற்றி வந்தன.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே இந்த படம் குறித்த அப்டேட்கள் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

The excitement and anticipation for #SarkaruVaariPaata is in the air! All our upcoming updates will be worth the wait. Until then, Stay safe & Stay healthy. pic.twitter.com/26PH3ENFU0

— Mythri Movie Makers (@MythriOfficial) June 11, 2021