2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.



இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.



இந்த படம் அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.கேஜிஎப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.கேஜி எப் 2 நீங்கள் எதிர்பார்த்ததை விட வெறித்தனமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



மற்றொரு ரசிகர் தளபதி விஜயை வைத்து இயக்கவேண்டும் என்று கேட்க ஆர்வத்துடன் இருப்பதுபோன்ற ஸ்மைலியை பதிவிட்டார்.சூர்யா குறித்து பேசிய அவர் தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களுக்காக எதையும் செய்யும் நடிகர் என்று தெரிவித்தார்.