கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது.இதனை இந்தியாவில் பரவாமல் தடுக்க தங்களால் முடிந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இந்த சமயத்தில் வேலை இல்லாமால் இருக்கும் இருக்கும் பலருக்கும் உதவும்படி பல பிரபலங்களும் தங்களால் முடிந்ததை கொடுத்து வருகின்றனர்.நேற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவியாக வழங்கினார்.



இதில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகையாக அளித்திருந்தார் விஜய்.இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேரள முதல்வர் பிரணாய் விஜயன் ரூ.10 லட்சம் வழங்கிய தமிழ் நடிகர் விஜய்க்கு நன்றி என்று தெரிவித்தார்.

Kerala CM mentions about Thalapathy Vijay’s donation towards #CoronaReliefFund #Master @actorvijay pic.twitter.com/dmLVHQ2KYi

— Vijay Fans Trends (@VijayFansTrends) April 24, 2020