உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த இக்கட்டான நிலையில் FEFSI தொழிலாளர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி திருத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு லட்ச ரூபாயை உதவிதொகையாக வழங்கியுள்ளார்.ஸ்டோன் பெஞ்ச்சை சேர்ந்த கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் ஒரு லட்ச ருபாய் வழங்கியுள்ளனர்.
Director @karthiksubbaraj donated 1 lac
— Nikkil (@onlynikil) March 30, 2020
Producers
Kaarthekeyen Santhanam &
Kalyan Subramanian of Stone bench Pvt Ltd
Donated 1 lac
To
FEFSI
Today@onlynikil