தென்னிந்திய நடிகர்களில் தரமான கதைகளில் கவனம் செலுத்தும் நடிகர் துல்கர் சல்மான். கடைசியாக வரனே அவஷ்யமுண்டு எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இவர் கைவசம் வான் திரைப்படம் உள்ளது. தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். மசாலா கஃபே இசையமைத்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் துல்கரின் நண்பராக நடித்துள்ளார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவான இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

தற்போது படத்திலிருந்து ஏலோ புல்லேலோ பாடல் வீடியோ வெளியானது. அனிருத் பாடிய இந்த பாடல் வரிகளை மணி அமுதவன் எழுதியுள்ளார். கோவா மற்றும் பார்ட்டி சார்ந்த கலர்ஃபுல் காட்சிகள் நிறைந்த இந்த பாடல் ரசிகர்களை ஈர்க்கும் என்றே கூறலாம்.