விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்,அதில் முக்கியமான ஒருவர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று விஜய் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றி அடுத்து சினிமாவுக்குள் நுழைந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.

இவரை போல பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நட்சத்திரமாக முயற்சி செய்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான பலரும் மக்கள் மத்தியில் செம ரீச் ஆகி விடுவார்கள்.தங்கதுரை,ராமர்,ரோபோ ஷங்கர்,தாடி பாலாஜி,ஈரோடு மகேஷ் என்று இந்த வரிசையில் பலர் இருக்கின்றனர்.இந்த கலக்கப்போவது யாரு தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த கலைஞர்களில் ஒருவர் நவீன்.

கலக்கப்போவது யாரு சீசன் 5-வில் அசத்திய நவீன் பலரிடமும் வெகுவாக பாராட்டை பெற்றிருந்தார்.இவர் சதீஷுடன் இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.மிமிக்கிரி கலைஞரான நவீன் பலரும் செய்யாத வித்தியாசமான குரல்களை மிமிக்கிரி செய்து அசத்துவதில் வல்லவர்,அப்துல் கலாம்,எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட சில இதற்கு எடுத்துக்காட்டுகள்.

சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் அப்துல் காலம் கதாபாத்திரத்துக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நவீன்.இப்படி பல சவால்களை எதிர்கொண்ட நவீன் தற்போது புதிய சவாலை ஏற்றுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பாவம் கணேசன் என்ற தொடரில் நாயகனாக நவீன் நடிக்கிறார்.இதன் ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியாகி ட்ரெண்ட் அடித்தது.இதனை தொடர்ந்து இந்த தொடரின் முக்கிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.இந்த தொடரில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண பரிசு தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நேஹா கௌடா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரின் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)