தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.சமீபத்தில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான கோமாளியில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மியூசியத்தில் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இதன் மூலம் இந்த சிறப்பை பெரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.சிங்கப்பூரில் உள்ள பிரபல மியூசியத்தில் இந்த சிலை இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற காஜல் இது மிகவும் பெருமையான ஒரு நிகழ்வு என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்