உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.



கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.



தற்போது நடிகை காஜல் அகர்வால் FEFSI தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம்,தெலுங்கு திரையுலகிற்கு ரூ.2 லட்சம்,பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம்,மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார்.இது தவிர தனது ஏரியாவில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்குவது மற்றும் PETAவுடன் இணைந்து செல்லப்பிராணிகளை தத்தெடுப்பது என்று தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து வருகிறார்.