ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ஷபானா.மேலும் சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.

புதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.ஜீ தமிழில் வாரத்தின் ஏழு நாட்களும் தற்போது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் பிரபல காமெடி நடிகர் மனோபாலா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான ஐஸ்வர்யா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் ஜனனி அசோக் குமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்த தொடரில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவருக்கு ஜோடியாக நடித்து வரும் VJ கதிருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Something that I missed so much for the past six months is #beingaishwarya Though I’m back still missing someone special in the set🙄 @its_shabana_ #missyoushabbooo #sembaruthi - Saree: @dressmaterialwholesale2020 Blouse: @santhanalakshmiashok @keetsmakeoverboutique

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar) on