தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் இளம் கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம்-2 படத்தின் மூலம் பிரபலமாகிய இவருக்கு ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் ஐஸ்வர்யா.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், குவாரண்டின் நாட்களில் என்ன பண்றீங்கனு மக்கள் கேட்கிறாங்க. நான் சுவர் ஏறிக்கிட்டு இருக்கேன். என்னை குவாரண்டின் இப்படி மாத்திடுச்சு என்று ஜாலியாக பதிவு செய்துள்ளார்.