சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் ஆன திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.அடல்ட் காமெடியாக உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.இந்த படத்தில் இயக்குனர் சந்தோஷ் ஹீரோவாகவும் நடிக்கிறார்.ஹீரோயின்களாக கரிஷ்மா மற்றும் அக்ரித்தி சிங் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.



தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நாளை ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.