கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஜுங்கா. அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் பாண்டியன் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். 2020-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி இந்தப் படத்துக்குப் பூஜைப் போடப்பட்டது.

அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் முழு படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு.

தற்போது இந்தப் படத்துக்கு அன்பிற்கினியாள் எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படம் மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, இசையமைப்பாளராக ஜாவித் ரியாஸ், எடிட்ட்ராக பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்குநரக ஜெய்சங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அன்பிற்கினியாள் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் கோகுல். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் கோகுல் கைவசம் கொரோனா குமார் திரைப்படம் உள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் தான் கொரோனா குமார். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Acting alongside appa @iarunpandianc ♥️
Definitely special one✨
directed by @DirectorGokul

Thank you @Karthi_Offl Sir for releasing the first look #Anbirkiniyal #AnbirkiniyalFirstLook@AandPgroups @kav_pandian @PradeepERagav @thinkmusicindia @proyuvraaj @praveenraja0505 pic.twitter.com/5Xlq6h05S1

— Keerthi Pandian (@iKeerthiPandian) February 15, 2021