ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த இவர் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறினார்.34 வயதான இவர் மும்பையில் தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் பாந்த்ரா இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

இவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீர விசாரித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக சுஷாந்த் சிங் ராஜ் ராஜ்புட்டின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.