கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.



கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இந்த ஊரடங்கை எண்ணி மக்கள் யாரும் பயப்படத்தேவையில்லை.அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் நிச்சயம் கிடைக்கும் அதற்காக நீங்கள் கடைகளில் குவியவேண்டாம் நாம் அமைதியாக வீட்டிலேயே இருந்தால் இந்த வைரஸை வீழ்த்தி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

I welcome this 21daylockdown announced by our PM nd Request all of you 2 cooperate fully,as dis will break d chain of coronavirus spread.
And Govt has ensured essential supplies will b available,so let’s not throng grocery&veg shops
Let’s fight this together #CoronavirusLockdown

— Dhanush (@dhanushkraja) March 24, 2020