நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை பெற்றவர் டிடி. இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது இயல்பான நகைச்சுவையால் திரைப்பிரபலங்களையும் ரசிகர்களாக மாற்றியவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் நளதமயந்தி, பவர் பாண்டி போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தார்.
தந்தையர் தினம் வருவதையொட்டி பிரபலங்கள் பலரும் தங்களது அப்பாக்கள் பற்றி உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் டிடி-யும் இன்ஸ்டாகிராமில் தனது அப்பாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பாவின் நினைவு தினத்தில் எழுதிய கடிதம் தான் அது.
அன்புள்ள அப்பா, எங்களை விட்டு இந்த உலகத்தை விட்டு பிரிந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தந்தையர் தினமும் வருவதால் அனைத்து அப்பாக்களுக்கும் பாராட்டாக தான் இதை நான் வெளியிடுகிறேன். அப்பாக்களுக்கு நான் உறுதியாக கூறுவது என்னவென்றால்.. நீங்கள்தான் உங்கள் மகன் அல்லது மகளுக்கு முதல் ஹீரோ. ஏனென்றால் ஒரு அப்பாவின் சக்தியை விட வலிமையானது வேறு எதுவும் இல்லை. இந்தக் கடினமான நேரம் எப்போது முடிவு பெறும் என்று உறுதியாக தெரியவில்லை ஆனால் நிச்சயம் இதுவும் கடந்து போகும். அட்வான்ஸ் தந்தையர் தின வாழ்த்துக்கள். என் அப்பாவுக்கு ஒரு சட்டை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுகிறேன். உங்கள் அமைதிக்காக நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன் என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் அவரது தந்தையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார் டிடி.